பராமரிப்பு பணியால் இன்று மின் நிறுத்தம்

 

காரைக்குடி, ஆக.22: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு அன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை அமராவதிபுதூர், ஐடிஐ, தேவகோட்டை ரோடு, சங்கராபுரம், ஆறாவயல், தானாவயல், வேட்டைக்காரன்பட்டி, அரியக்குடி, விசாரயன்கோட்டை, எஸ்.ஆர்.பட்டணம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, சிஐஎஸ்எப் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் லதாதேவி தெரிவித்துள்ளார்.

கல்லல் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது இதனை முன்னிட்டு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கல்லல், சிறுவயல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, வெற்றியூர், மாலைகண்டான், சாத்தரசம்பட்டி, கவுரிப்பட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டியூர், செட்பனூர், செவரக்கோட்டை, பெரிய சேவப்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் லதாதேவி தெரிவித்துள்ளார்.

Related posts

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு

சவுக்கை செடிகளை பிடுங்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

கணவன் மாயம்: மனைவி புகார்