பராமரிப்பு பணிகளுக்காக பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து தடை காரணமாக சிறப்பு ரயில்கள் ரத்து !

ராமேஸ்வரம்: பராமரிப்பு பணிகளுக்காக பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால், ராமேஸ்வரத்திலிருந்து இன்று மாலை 04.30 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – திருப்பதி சிறப்பு ரயில் ராமேஸ்வரம் – மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.  அதே போல ராமேஸ்வரத்திலிருந்து இன்று இரவு 08.25 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ராமேஸ்வரம் – மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு இரவு 08.55 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். மேலும் 24 மணி நேரம் தாமதமாக இன்று இரவு 11.55 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்ட  ராமேஸ்வரம் – மாண்டுயாடிஹ் சிறப்பு ரயில் நாளை  அதிகாலை 12.30 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு