பரமத்தி அருகே அனுமதியின்றி மது விற்பனை

 

க.பரமத்தி, பிப். 2: க.பரமத்தி அருகே அனுமதியின்றி மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். க.பரமத்தி ஒன்றிய பகுதியில் சின்னதாராபுரம் மற்றும் க.பரமத்தி ஆகிய இரண்டு வேவ்வேறு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை விற்கப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்தந்த பகுதிகளில் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அதில் சின்னதாராபுரம் அருகே வெங்கடாபுரம்பிரிவு பகுதியில் எஸ்ஐ திருப்பதி மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (62) மது விற்பனைக்காக பதிக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதேபோல க.பரமத்தி காவல் நிலைய எஸ்எஸ்ஐ குமரேசன் மற்றும் போலீசார் விசுவநாதபுரி பகுதியில் நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (57) என்பவர் 7 பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்படது, இருவருடம் இருந்தும் 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை