பரமக்குடி அரசு கல்லூரியில் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி

பரமக்குடி, ஜன.6: பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் ராமநாதபுரம் மாவட்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி வழங்கப்பட்டது.  தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியும் இணைந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி துவங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமிற்கு பரமக்குடி அரசு கல்லூரி முதல்வர் மேகலா தலைமை தாங்கினார். முன்னதாக பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கணிதத் துறை தலைவர் அறிவழகன் வரவேற்றார்.

பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் முருகம்மாள் பயிற்சியினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். கமுதி வட்டார கல்வி அலுவலர் சண்முகம், வரலாற்று துறை தலைவர் கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் துறைத் தலைவர்கள் ஆஷா, ரேணுகா தேவி, கண்ணன், மும்தாஜ் பேகம், தினேஷ் பாபு, விஜயகுமார், ரமேஷ், மோகன கிருஷ்ணவேணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த பணியிடை பயிற்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் 52 பேர் கலந்து கொண்டனர். இறுதியில் இயற்பியல் துறை தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை