பரனூர் சுங்கச்சாவடி ஊழியருக்கு சரமாரி அடி கார் டிரைவருக்கு வலை

செங்கல்பட்டு: சென்னையில் இருந்து, தென்மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்களும், செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு  திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த கார், பரனூர் சுங்கச்சாவடியில் நிற்காமல், வேகமாக செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக, அங்குள்ள தடுப்பு கம்பியின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால், காரில் இருந்தவர் ஆத்திரமடைந்து, அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியரை சரமாரியாக தாக்கிவிட்டு, தப்பி சென்றார். புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவியில் பதிவான கார் பதிவு எண்ணை வைத்து, தப்பி சென்ற டிரைவரை தேடி வருகின்றனர்….

Related posts

மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயிலில் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கறிஞர் கைது

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு