சென்னை: தலைமை செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் தமிழக உறைவிட டாக்டர்கள் சங்கத்தினர் பேச்சு நடத்தினர். இதுகுறித்து அச்சங்கத்தின் நிர்வாகி டாக்டர் விக்னேஷ் கூறியதாவது: எம்.பி.பி.எஸ் பயிற்சி டாக்டர்களுக்கு ரூ. 21 ஆயிரம் வழங்கப்படுகிறது. அமைச்சரிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து ரூ.3,000 கூடுதலாக உயர்த்தப்பட உள்ளது. அதேபோல், முதுநிலை டாக்டர்களுக்கு ரூ. 38 ஆயிரம் இருந்து ரூ. 48 ஆயிரமாகவும், உயர்சிறப்பு முதுநிலை டாக்டர்களுக்கு ரூ. 43 ஆயிரத்தில் இருந்து ரூ.55 ஆயிரமாகவும் உயர்த்தப்படும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதனால் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம். …