பயணியை தாக்கிய கார் டிரைவர் கைது

 

கோவை, செப். 3: கோவை போத்தனூர் கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்தவர் கவுதம். இவரது மனைவி சந்திரகலா (38). இவர், தனது குடும்பத்தினருடன் ஆர்.எஸ்.புரம் சென்றார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்புவதற்காக சந்திரகலா கால்டாக்சி புக்கிங் செய்தார். கால் டாக்சி வந்ததும் அதில் அனைவரும் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது சந்திரகலாவின் தாயார் காரில் ஏறும் முன்பு டிரைவர் குமார் என்பவரை காரை இயக்கியதாக தெரிகிறது.

அப்போது அவரது தாயார் காரில் ஏற முடியாமல் தடுமாறினார். இதனைப்பார்த்த சந்திரகலா டிரைவரை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கால் டாக்சி டிரைவர், சந்திரகலாவின் பெற்றோரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சந்திரகலா ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணம்பட்டியை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் குமார் (63) என்பவரை கைது செய்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்