Wednesday, July 3, 2024
Home » பயணிகள் நிழற்குடை திறப்பு

பயணிகள் நிழற்குடை திறப்பு

by Ranjith

 

பரமக்குடி,ஆக.1: பரமக்குடி நகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட தாலுகா அலுவலகம் எதிரில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம், பொறியாளர் மீரா அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு செயலாளர் லண்டன் ரமேஷ் வரவேற்றார்.

நவாஸ் கனி எம்.பி. புதிய பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து எமனேஸ்வரம் இளையாங்குடி சாலையில் கட்டப்பட்டுள்ள மற்றொரு நிழற்குடையவும் திறந்து வைத்தார். இதில் வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், நகர்மன்ற உறுப்பினர்கள் அப்துல் மாலிக், தேவகிட்டு, தனலட்சுமி, ராதா, பாக்யராஜ், நகர் காங்கிரஸ் தலைவர் அகமது கபீர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர்மன்ற உறுப்பினர் தேவிகா நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

8 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi