திருக்கோவிலூர் : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ஜம்படை கிராமத்தில் மணலூர்பேட்டைக்கு செல்லும் வழியில் பயணிகள் நிழற்குடை, குடிநீரேற்றும் மோட்டார் ஆகிய கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பாஜக கட்சி சுவர் விளம்பரம் செய்துள்ளனர். தற்போது தேர்தல் விதிமுறை தமிழகத்தில் அமலில் உள்ளதால் இதனை வருவாய் துறையினர் அழிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக பிற கட்சி சார்பில் குற்றம்சாட்டி உள்ளனர். ஆகையால் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜம்படை பகுதியில் பாஜக கட்சியினர் சுவர் விளம்பரம் செய்துள்ளதை அழிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். …