தாம்பரம்: பீர்க்கன்காரணை, அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராகவன் மகன் அருண்குமார் (19), கிண்டியில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக பப்ஜி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு கூட செல்லாமல், பப்ஜி விளையாட்டில் மூழ்கியதாக கூறப்படுகிறது. நேற்று வெளியில் சென்ற குடும்பத்தினர், வீடு திரும்பியபோது, கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது அருண்குமார் தூக்கில் தொங்கியது தெரிந்தது. தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிவு செய்து, அருண்குமாரின் செல்போனை சோதனை செய்தபோது, தொடர்ந்து பப்ஜி விளையாடி வந்தது தெரிய வந்தது….