இளம்பிள்ளை, செப்.25: இளம்பிள்ளை ஏரி மற்றும் வளம் மீட்பு பூங்கா பகுதியில், பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் நந்தினி ராஜகணேஷ் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணை தலைவர் ராஜமாணிக்கம், செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.