பனங்கள் விற்ற 2 பேர் கைது

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த கூவத்தூர், வடப்பட்டினம் பகுதியில் பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக, கூவத்தூர் போலீசாருக்கு தகவல்  கிடைத்தது. அதன்படிபோலீசார், அங்கு  சென்று சோதனை நடத்தினர். கள் விற்பனை செய்து கொண்டிருந்த2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், வடப்பட்டினத்தை சேர்ந்த மூர்த்தி (47), சென்னை காசிமேடு கண்ணன் (36) என தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்….

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

வீட்டில் இருந்து திருடிய ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் அபேஸ்