பந்தலூர்: பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் கடும் குளிர் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பந்தலூர் சுற்றுவட்டாரம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பந்தலூர் பகுதியில் கடும் மேக மூட்டத்துடன் சாரல் மழை பெய்ததால் காலநிலை மாற்றத்தின் காரணமாக கடுங்குளிர் காணப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டம் சற்று குறைந்து காணப்பட்டது. வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டிச்சென்றனர். பனிமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகனஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். காலநிலை மாற்றம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது….