பத்மனாபபுரம் ஆர்டிஓ ஆபீசில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் முகாம்

நாகர்கோவில், ஆக.28: பத்மனாபபுரம் ஆர்டிஓ தமிழரசி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிப்பதாவது: பத்மனாபபுரம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம் பத்மனாபபுரம் ஆர்டிஒ அலுவலக கூட்டரங்கில், ஆகஸ்ட் 28ம் தேதி (இன்று) புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆர்டிஓ தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் தாலுகாவில் உள்ள மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்