திருவனந்தபுரம், டிச. 9: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே மேலவெட்டிப்புரம் பகுதியை சேர்ந்தவர் நீது (20). திருச்சூரை சேர்ந்த ஒரு வாலிபரை காலித்து வந்து உள்ளார். தொடர்ந்து 2 பேருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து. இதனால் நீது கர்ப்பம் ஆனார். இந்தநிலையில் கடந்த வாரம் அவருக்கு குழந்தை பிறந்தது. இது வெளியே தெரிந்தால் அவமானமாகி விடுமே என்று கருதிய நீது, குழந்தையை பிறந்த சிறிது நேரத்திலேயே குளியல் அறையில் வைத்து முகத்தில் தண்ணீரை ஊற்றி கொலை செய்தார். இதுகுறித்து பத்தனம்திட்டா போலீசுக்குத் தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி நீதுவை போலீசார் கைது செய்தனர்.