பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

 

திண்டுக்கல், செப். 11: கேலோ இந்தியா பெண்கள் வூசு லீக் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு திண்டுக்கல்லில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. மாநில அளவிலான கேலோ இந்தியா பெண்கள் வூசு லீக் போட்டி திண்டிவனத்தில் கடந்த 31ம் தேதி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் ரேஷ்மி ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கம், சுபஸ்ரீ ஒரு வெள்ளி பதக்கம், ரேஹிதா இரண்டு வெண்கலம் பதக்கம் பெற்றனர்.

மேலும் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற 22வது தேசிய ஜூனியர் வூசு போட்டியில் இரண்டு வெண்கல பதக்கம் வென்ற  மற்றும் ஜீவா ஆகியோருக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த மாஸ்டர் ஜாக்கி சங்கருக்கு பாராட்டு விழா நேற்று ரவுண்ட் ரோட்டில் உள்ள வூசு தலைமை பயிற்சி மையத்தில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட வூசு சங்க தலைவர் ஹரிஹரன் வெற்றி பெற்ற அனைவரயும் பாராட்டி பரிசு வழங்கினார். வூசு சங்க பொருளாளர் கவிதா நன்றி கூறினார்.

Related posts

திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

அரசு அலுவலகங்களில் ‘தமிழ் வாழ்க’ மின்னொளி பெயர்ப்பலகை பழுது: சீரமைக்க கோரிக்கை

மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்