பண்ணாரி கோயிலில் கர்நாடக இளம்பெண் மாயம்

ஈரோடு, ஜன. 12: கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், உடையார்பாளையத்தை சேர்ந்தவர் நாகசுந்தரம். இவரது மகள் நந்தினி (21). இவர் கல்லூரியில் 2 ஆண்டு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நாகசுந்தரம் பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு வந்துள்ளார். கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு அமர்ந்திருந்த போது, பிரசாதம் வாங்கி வருவதாக கூறிச்சென்ற நந்தினி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் கோயில் வளாகம் முழுவதும் தேடியும் நந்தினி குறித்த எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சத்தியமங்கலம் போலீசில் இது குறித்து தந்தை நாகசுந்தரம் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்