பணம் பறித்து மிரட்டியவர் குண்டாசில் கைது

சேலம், பிப். 13:சேலம் அருகே போலி உயில் தயாரித்து, பணம் பறித்து மிரட்டியவரை, போலீசார் குண்டாசில் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ராஜீலு தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (58). இவர் மீது சேலம் சீலநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில், தனது தந்தை பெயரில் உள்ள சொத்து தொடர்பாக, மாணிக்கவாசகம் போலி உயில் தயாரித்ததுடன், வில்லங்கத்தை ஏற்படுத்தி ₹4.61 கோடி பணத்தை பெற்றுக் கொண்டார். மேலும் ₹ஒரு கோடி மிரட்டுவதாக தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார், மாணிக்கவாசகத்தை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையில், இதேபோன்று பலரிடம் மாணிக்கவாசகம் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை குண்டாசில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அவர், மாணிக்கவாசகத்தை குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்