பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது

 

மதுரை, ஆக. 27: மதுரை விளாச்சேரி ஆதிசிவம் நகரை சேர்ந்தவர் தர்பார்ராஜா(62) .இவரிடம் விளாச்சேரி மொட்ட மலையைச் சேர்ந்த 3 வாலிபர்கள் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளனர். ஆனால் தர்மராஜா பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் 3 பேரும் அவரை வழிமறித்து கொலை செய்யப்போவதாக அரிவாளுடன் விரட்டியுள்ளனர்.

இதில் பயந்து ஓடிய தர்மராஜா வீட்டுக்குள் ஓடிச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். பின்னர் சம்பவம் குறித்து திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விளாச்சேரி மொட்டமலை பிரசாத் என்ற சேது பிரசாத்(30), அதே பகுதியைச் சேர்ந்த கரன்ராஜா(25), குமார்(24) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்