வானூர், ஜூன் 25: வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டானூரில் பொதுகழிப்பிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டானூர் புதுச்சேரி மாநிலம் கோரிமேடு அருகே உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் இந்த வழியாகத்தான் வரவேண்டும். புதுச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான கடைகள் மற்றும் லாரி புக்கிங் அலுவலகங்கள் உள்ளன. இந்த பகுதியில் பொதுகழிப்பிடம் இல்லாததால் அங்கு வரும் வெளிமாநில லாரி ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு அடைந்து அப்பகுதி துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பொதுகழிப்பிடம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டானூரில் பொது கழிப்பிடம் கட்ட வேண்டும்
previous post