பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சிவகாசி, ஆக.24: இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியதையடுத்து நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகாசியில் டான்பாமா திருமண மண்டபம் முன்பு தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) சார்பில் சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியதை அடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். டான்பாமா தலைவர் கணேசன், துணை தலைவர்கள் ராஜரத்தினம், அபிரூபன், செல்வசண்முகம், பொதுச் செயலாளர் பாலாஜி பாபநாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்