சிவகாசி, ஆக.24: இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியதையடுத்து நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகாசியில் டான்பாமா திருமண மண்டபம் முன்பு தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) சார்பில் சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியதை அடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். டான்பாமா தலைவர் கணேசன், துணை தலைவர்கள் ராஜரத்தினம், அபிரூபன், செல்வசண்முகம், பொதுச் செயலாளர் பாலாஜி பாபநாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.