பட்டாசு வெடித்ததில் 4 பேர் தீக்காயம்

அணைக்கட்டு, மே 13: கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 4 பேர் தீக்காயம் அடைந்தனர். அணைக்கட்டு தாலுகா, வேலங்காடு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரி திருவிழா கடந்த 10ம் தேதி நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு வேலங்காடு கிராமத்தில் புஷ்பரத வீதிஉலா நடந்தது. இதையொட்டி நடந்த வாணவேடிக்கையை கிராம மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, பட்டாசில் இருந்து தீப்பொறி சிதறி விழுந்ததில் அதே கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் மனைவி இந்துமதி(30), அவரது மகள் பூஜா(3), முனியப்பன் மனைவி சவுந்தர்யா(28), அவரது மகள் மோகனப்பிரியா(8) ஆகிய 4 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 4 பேரும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு