பட்டாசுகளை பாதுகாப்புடன் வெடிக்க கறம்பக்குடியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

 

கறம்பக்குடி,நவ.10: விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் பட்டாசுகளை பாதுகாப்புடன் வெடிப்பது குறித்து கறம்பக்குடியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்பு வீரர்கள் வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையம் சார்பாக விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு கார்த்திகேயன் தலைமையில் வீரர்கள் பேருந்து நிலையம், புதுக்கோட்டை சாலை, சீனிக்கடை முக்கம், அம்புக்கோவில் முக்கம் உள்கடை வீதி, மார்க்கெட் பகுதி ஆகிய பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள், பெண்கள் ஆகியோரிடம் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்கும் போது தீவிபத்து ஏற்பட்டால் தீயணைப்பு நிலையத்திற்கு போனில் தொடர்பு கொண்டும் தெரிய படுத்த வேண்டும் என்று விபத்தில்லா தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Related posts

கற்பகம் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஒராட்டுக்குப்பையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை பேரூராட்சி தலைவர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

செட்டிபாளையம் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைள் திறப்பு