மதுரை, நவ. 10: மதுரை, திலகர் திடல் காவல் நிலைய எஸ்.ஐ பரமசிவம் தலைமையில் போலீசார் சிம்மக்கல், எல்.என்.பி., அக்ரஹாரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருவர் உரிய அனுமதியின்றி பட்டாசுகளுடன் சுற்றித்திரிந்ததை பார்த்தனர். விசாரித்ததில் அவரிகள் அதே பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் (43), ஜெயபால் (71) என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 123 பட்டாசு பாக்ஸ்கள், நான்கு சாக்கு பைகளை பறிமுதல் செய்தனர்.
பட்டாசுகளுடன் 2 பேர் கைது
previous post