திருவாடானை, அக்.1:பாண்டுகுடியில் கண்மாயில் கட்டப்பட்டுள்ள படித்துறை பழுதடைந்துள்ளதை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே பாண்டுக்குடியில் கண்மாயில் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்துறை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. கண்மாயில் தண்ணீர் நிறைந்து இருக்கும் போது, கிராம பொதுமக்கள் இந்த படித்துறையில் இறங்கி குளித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த படித்துறை பல இடங்களில் சிமெண்ட் பெயர்ந்தும், விரிசல் விட்டும் உள்ளது. இதனால் மக்கள் யாரும் இதனை பயன்படுத்த முடியாத நிலையாக மாறி விட்டது. எனவே இந்த படித்துறையை பழுது பார்த்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.