படப்பிடிப்பு தளத்தின் கழிவறையில் பிரபல டிவி நடிகை தற்கொலை: நடிகர் அதிரடி கைது

மும்பை: படப்பிடிப்பு தளத்தின் கழிவறையில் பிரபல டிவி நடிகை துனிஷா சர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, நடிகையுடன் பணியாற்றிய சக நடிகர் ஷீசன் முகமதுவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்தவர் பிரபல டிவி நடிகை துனிஷா சர்மா (20). இவர், அலிபாபா தாஸ்தென்- இ- காபூல் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார். வசாய் பகுதியில் நடைபெற்ற ஷூட்டிங்கில் பங்கேற்றார். இடைவெளிக்காக மேக்கப் அறைக்கு சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் படபிடிப்பில் இருந்த பணியாளர்கள் அவரது அறையை திறக்க முயன்றனர். உள்பக்கமாக தாழிட்டு இருந்ததால் திறக்க முடியவில்லை. தகவலறிந்து வந்த போலீசார், மேக்கப் அறை கதவை உடைந்து திறந்து பார்த்த போது, துனிஷா சர்மா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வரும் 4ம் தேதி தனது 21வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் துனிஷா சர்மா இறந்த சம்பவம் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து வாலிவ் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘நடிகை துனிஷா சர்மா மரண சம்பவம் தொடர்பாக, ‘அலி பாபா தஸ்தான்-இ-காபூல்’ தொடரில் நடித்த நடிகர் ஷீசன் முகமது கான் மீது புகார் கூறப்பட்டுள்ளது. அவர் கடந்த சில மாதங்களாக துனிஷா சர்மாவுக்கு மனரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் ஷீசன் முகமதுவின் தொந்தரவு குறித்து, தனது உறவினர்களிடம் துனிஷா சர்மா புகார் கூறியுள்ளார். அவர்களும் ஷீசன் முகமதுவை எச்சரித்துள்ளனர். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால், மன அழுத்த மாத்திரைகளை துனிஷா சர்மா உட்கொண்டுள்ளார். பின்னர் மேக்கப் அறையின் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் ஷீசன் முகமதுவை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்று தெரிவித்தனர்….

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு