எப்படிச் செய்வது?பச்சைமிளகாயை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, பச்சைப்பட்டாணியை சேர்த்து வதக்கவும். தக்காளி, அரைத்த பச்சைமிளகாய் விழுது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். தண்ணீர் வற்றி கலவை சுருண்டு வரும்போது தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி புலாவ், சப்பாத்தி, பூரியுடன் பரிமாறவும்.