Sunday, October 6, 2024
Home » பசுமையாக காட்சியளிக்கும் முதுமலை சாலைகளில் விலங்குகள் உலா

பசுமையாக காட்சியளிக்கும் முதுமலை சாலைகளில் விலங்குகள் உலா

by kannappan

ஊட்டி :  முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் பசுமை திரும்பியுள்ளதால், விலங்குகள் சாலையோரங்களில் வலம் வருகின்றன. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கீ.மீ., பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. அண்மையில் இந்த புலிகள் காப்பகம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு புலிகள் மட்டுமின்றி காட்டு யானைகள், சிறுத்தைகள், கரடி, காட்டு எருமைகள், பல்வேறு வகையான மான்கள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இது தவிர இந்த சரணாலயத்தில் விலை உயர்ந்த தேக்கு மற்றும் ஈட்டி மரங்கள் அதிகளவு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த புலிகள் காப்பகம் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் எல்லையில் அமைந்துள்ளது. இந்த முதுமலை புலிகள் காப்பகம் வழியாக தொரப்பள்ளி – கக்கநல்லா சாலை மற்றும் மசினகுடி – தெப்பகாடு ஆகிய இரு சாலைகள் செல்கின்றன. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இங்குள்ள தெப்பகாட்டில் இருந்து வாகன சவாரியும் உள்ளது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வனத்திற்குள் சென்று யானை உள்ளிட்ட வன விலங்குகளை பார்த்து மகிழ்கின்றனர். இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக பெய்த தொடர் மழை பெய்தது. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவு பெய்தது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் மற்றும் சிறிய மரங்களும் பசுமை திரும்பியது. இங்குள்ள நீரோடைகள், குளங்கள் மற்றும் குட்டைகள் நிரம்பின. வனங்களிலும் பசுமை திரும்பியுள்ளதால், கரடி, மான், யானை போன்ற வன விலங்குகள் சாலையோரங்களில் உலா வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். வன விலங்குகள் சாலையோரம் உலா வரும் நிலையில் அவற்றை தொந்தரவு செய்ய வேண்டாம் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்….

You may also like

Leave a Comment

fourteen + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi