பசுபதிபாளையம் பகுதியில் வடிகால் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

கரூர் : கரூர் பசுபதிபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சாக்கடை வடிகால் புதிதாக கட்டும் பணியும், சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.இந்த பணியின் காரணமாக சாலையின் வழியாக வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே, இந்த வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடித்து எளிதாக போக்குவரத்து நடைபெறும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வடிகால் அமைக்கும் பணியை து£ரிதப்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்