அல்வார்: ராஜஸ்தான் மாநில முன்னாள் பாஜ எம்எல்ஏ கியான் தேவ் அகுஜா. இவர் தனது ஆதரவாளர்கள் இடையே தன்னை மறந்து பேசிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் அந்த வீடியோவில், ‘பசுக்களை கொல்பவர்களை இரக்கமின்றி கொல்லுங்கள்; அவ்வாறு பசுவை கொன்ற 5 பேரை ஏற்கனவே நாங்கள் கொன்று விட்டோம். இப்படிப்பட்டவர்களை கொல்வதற்கு உங்களுக்கு முழு சுதந்திரம் தருகிறேன். உங்களை வழக்கில் இருந்து நிரபராதி என்று நிரூபித்து காப்பாற்றுவோம் ,’ என்று பேசியுள்ளார். அவர் பேசியது உண்மைதானா என்று பரபரப்பு நிலவுகிறது. அது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. ஆனால், இந்த வீடியோவை ஏற்க பாஜ மறுத்துள்ளது. …