Tuesday, September 17, 2024
Home » பங்களா வீட்டில் ஜாயின்ட் சரக்கு பார்ட்டி குமரி கல்லூரியில் போலீசார் விசாரணை: மவுனம் காக்கும் மாணவிகள்

பங்களா வீட்டில் ஜாயின்ட் சரக்கு பார்ட்டி குமரி கல்லூரியில் போலீசார் விசாரணை: மவுனம் காக்கும் மாணவிகள்

by kannappan

நாகர்கோவில்: குமரியில் பங்களா வீட்டில் ஜாயின்ட் சரக்கு பார்ட்டி நடத்திய மாணவ, மாணவிகள் பயிலும் கல்லூரியில் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவிகள் எதுவும் கூறாமல் மவுனம் காத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பங்களாவில் நடந்த ஜாயின்ட் சரக்கு பார்ட்டியில் ஆண் நண்பர்களை அழைத்து கல்லூரி மாணவிகள் விருந்தளித்தது பற்றி மாணவி ஒருவரின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவில் பேசிய மாணவி பிரச்னை நடந்த பார்ட்டியில் கலந்து ெகாள்ளவில்லை என்றாலும், இதற்கு முன் இந்த பங்களாவில் நடந்த ஜாயின்ட் சரக்கு பார்ட்டியில் பங்கேற்று மது போதையில் ஆண் நண்பருடன் ஜாலியாக இருந்துள்ளார். அந்த மாணவி, ஒரே ஒரு முறை தவறு செய்து விட்டதாக கூறி இருக்கிறார்.  இந்த ஆடியோ கல்லூரி மாணவி ஒருவர், வாலிபர் ஒருவரின் தாயாரிடம் பேசிய உரையாடலாகும். உங்கள் மகனுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜாயின்ட் பார்ட்டி என்ற ெபயரில் மது விருந்து நடத்துவது எனக்கு தெரியும். ஆனால் ஆண் நண்பர்கள் வருவார்கள் என்பது முதலில் எனக்கு தெரியாது. ஒரே முறை மது விருந்தில் கலந்து கொள்ள சென்ற பின் தான், அங்கு ஆண் நண்பர்கள் வருவது தெரிந்தது. போதையில் நானும் தவறு செய்து விட்டேன். அதன்பின்னர் ஜாயின்ட் பார்ட்டிக்கு என்னை பலமுறை தோழிகள் அழைத்தும் நான் செல்லவில்லை. இந்த விஷயத்தை வைத்து என்னை இப்போது சிக்கலில் மாட்டி விட துடிக்கிறார்கள் என மாணவி கூறி உள்ளார். வாலிபரின் தாயார் தான் இந்த ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது பார்ட்டியில் மாணவியை தாக்கிய அவரது முன்னாள் காதலன் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்டால் தான் சம்பவத்தன்று யார், யார் அந்த பங்களாவில் இருந்தார்கள் என்பது தெரிய வரும் என போலீசார் கூறி உள்ளனர். இதற்கிடையே போதையில் மாணவிகளுடன் உல்லாசமாக இருந்தவர்கள், அதை வீடியோ பதிவு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. எனவே முதலில் மாணவிகள் மற்றும் அவர்களின் ஆண் நண்பர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து, அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்ய தனிப்படை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக கருங்கல் அருகே சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது 4 மாணவிகள், 4 மாணவர்களை தனியாக அழைத்து விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் தரப்பில் எதுவும் உண்மையில்லை என கூறி உள்ளனர். சில மாணவிகள் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்துள்ளனர். இருப்பினும் இது தொடர்பான ரகசிய விசாரணை தொடர்வதாக போலீசார் கூறி  உள்ளனர்.நண்பர்களை மாற்றி உல்லாசம்பங்களா வீட்டில் நடந்த ஜாயின்ட் சரக்கு பார்ட்டியில் பங்கேற்ற  மாணவிகள், இளம்பெண்கள் சிலர் தங்களுடன் வந்த நண்பர்களை மாற்றியும் உல்லாசமாக  இருந்ததாக கூறப்படுகிறது. வாரம் ஒருமுறை இது போன்ற சந்திப்புகள் நடந்திருக்கிறது. இந்த மதுவிருந்து, உல்லாச நிகழ்ச்சி செல்போனில் வீடியோ பதிவு செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் பலரை பதற்றம் அடைய வைத்துள்ளது….

You may also like

Leave a Comment

3 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi