Friday, July 5, 2024
Home » பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 760 மீட்டர் பாலம் உள்நாட்டு படகு சேவை திட்டம் புத்துயிர் பெற நடவடிக்கை: நீர்வழிச்சாலை ஆணையத்திடம் வடிவமைப்புகள் சமர்ப்பிப்பு

பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 760 மீட்டர் பாலம் உள்நாட்டு படகு சேவை திட்டம் புத்துயிர் பெற நடவடிக்கை: நீர்வழிச்சாலை ஆணையத்திடம் வடிவமைப்புகள் சமர்ப்பிப்பு

by kannappan

சென்னை: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உள்நாட்டு படகு சேவை திட்டம் புத்துயிர் பெறுவதற்கான நடவடிக்கையாக, பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 760 மீட்டர் பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை உள்நாட்டு நீர்வழிச்சாலை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது. கப்பல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ ஆணையமாக (IWAI) உள்நாட்டு நீர்வழிச்சாலை ஆணையம் உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு பக்கிங்காம் கால்வாயில் 110 கி.மீ தொலைவுக்கு சென்னை சென்ட்ரலுடன் மரக்காணத்தை இணைக்கும் வகையில் படகு சேவை தொடங்க முன்மொழிவு கொண்டுவரப்பட்டது. ஆனால் பல தாழ்வான பாலங்கள், செயலிழந்த கட்டமைப்புகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் காரணமாக இத்திட்டம் தடைபட்டது. பிறகு நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பல அரசு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கிடையில் நெடுஞ்சாலைத்துறையானது பழைய மகாபலிபுரம் சாலையை கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்கும் திட்டத்தில் மேலும் ஒரு பாலம் கட்டுவதற்கான திட்டத்தை கொண்டுவந்தது. 2016-17ம் ஆண்டு முதல் எந்த புதியவற்றுக்கும் IWAI-ன் ஒப்புதல் கட்டாயமாகும். இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கால்வாயின் அதிகபட்ச வெள்ள மட்டத்திலிருந்து (15 அடி) உயரம் இருந்தால் மட்டுமே பாலம் கட்ட அனுமதி வழங்க IWAI தயாராக இருந்தது. எனவே, நாங்கள் அதன்படி எங்கள் வடிவமைப்புகளை சமர்ப்பித்துள்ளோம். விரைவில் 33 ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம். கால்வாயின் இருபுறமும் வீடுகள் வடிவில் சரிவுகள் அமைக்க முடியும். இதற்கு ஒப்புதல் கிடைத்ததும், இந்த திட்டம் சென்னைக்கு இரண்டு வழிகளில் பயனளிக்கும். அதில் ஒன்று, ஈசிஆர்-ஓஎம்ஆர் இணைப்பு சாலை விரைவில் முடிக்கப்பட்டு ஐடி வழித்தடத்தில் வாகன நெரிசலை குறைக்க உதவும். மற்றொன்று இது தமிழக அரசை சோதனை அடிப்படையில் படகு சேவைகளை தொடங்க அனுமதிக்கிறது. ரூ.334 கோடியில் கட்டப்படும் 1.4 கிமீ இணைப்புச் சாலை, துரைப்பாக்கம் சந்திப்பில் தொடங்கி நீலாங்கரையில் முடிகிறது’’ என்றார்.  இதுகுறித்து ஓஎம்ஆர் பகுதி வாசிகள் கூறுகையில், ‘‘படகு சேவைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக பல ஆண்டுகளாகியும் கிடப்பில் உள்ள சாலை திட்டத்தை விரைவில் முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓஎம்ஆரில் இருக்கும் இணைப்புச் சாலைகள் குறைந்தது 10 கி.மீ இருக்க வேண்டும். ஈசிஆர் அடைவதற்கு வாகன ஓட்டிகள் இப்போது திருவான்மியூர் லட்டிஸ் பாலம் சாலை அல்லது சோழிங்கநல்லூரில் உள்ள கலைஞர் கருணாநிதி சாலையை பயன்படுத்துகின்றனர். உட்புற சாலைகள் இணைக்கப்பட்டாலும் அவை இருவழி போக்குவரத்தை ஆதரிக்கவில்லை. மேலும் அதிக செலவு ஏற்படும் என்பதால் அவற்றை அகலப்படுத்துவது சாத்தியமில்லை. படகு சேவை திட்டம் காகிதத்தில் நன்றாக இருக்கிறது, ஆனால் அது நடைமுறையில் செயல்படுத்த இயலாது. மாஸ் ரேபிட் டிரான்ஸிட் சிஸ்டம் டிராக்குகள் கட்டமைக்கப்பட்டுள்ள கிரீன்வேஸ் சாலை, மந்தைவெளி போன்ற இடங்களில் கால்வாயின் கரைகள் பெரிய அளவில் நீர்வழிப்பாதை அகலத்தை குறைத்துள்ளன” என்றார்….

You may also like

Leave a Comment

eight + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi