பக்கத்து வீட்டுக்காரரை வெட்டிய வாலிபர் கைது

சேலம், செப்.13: சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி அய்யன்நகரை சேர்ந்தவர் சிலம்பரசன்(20). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மணிகண்டனை அவரது வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் சிலம்பரசன்தான் என மணிகண்டன் நினைத்தார். இதுதொடர்பாக மணிகண்டனுக்கும் சிலம்பரசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் சிலம்பரசன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற மணிகண்டன் திடீரென பிளேடால் சிலம்பரசனின் மார்பில் வெட்டினார். இதில் அலறியடித்து கொண்டு சிலம்பரசன் எழுந்தார். பின்னர் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது குடும்பத்தினர் படுகாயமடைந்த சிலம்பரசனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின்பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி