‘நோபார்க்கிங்கில்’ காரை நிறுத்திய நடிகருக்கு அபராதம்: மும்பை போலீஸ் அதிரடி

மும்பை: ‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கு மும்பை போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன் மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்கு தனது பெற்றோருடன் சாமி கும்பிடச் சென்றார். சொகுசு காரில் சென்ற அவர், போக்குவரத்து விதிகளை மீறி ‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்தியிருந்தார். தொடந்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அங்கு போக்குவரத்து போலீசார் வந்தனர். அவர்கள் போக்குவரத்து விதிகளை மீறிய கார்த்திக் ஆர்யனுக்கு அபராதம் விதித்து சலான் வழங்கினர். மேலும், கார்த்திக் ஆர்யன் வந்த காரின் படத்தை போலீசார் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், நடிகர் வந்த காரின் நம்பர் பிளேட் எண்ணை போலீசார் மறைத்துள்ளனர். மேலும் அவருக்கு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்ற விவரங்களையும் போலீசார் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

நீதிமன்ற காவலில் இருக்கும் குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன்ஜாமீன் பெற தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆற்றில் பாய்ந்த பஸ்: 20 பேர் படுகாயம்

பரந்தூர் விமான நிலையம்: சுற்றுச்சூழல் ஆய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி