மும்பை: சிவசேனா தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்குவோம் என்ற பாரதிய ஜனதா மேலவை உறுப்பினர் பேச்சு மராட்டிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. பாரதிய ஜனதா மேலவை உறுப்பினரான பிரசாத் லாட் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது தேவைப்பட்டால் சிவசேனா கட்சி தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டமாகவும் தயங்க மாட்டோம் என்று பேசியது சர்ச்சைக்கு வித்திட்டது. பாம்பே மேம்பாட்டு துறையினர் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் கலந்துக்கொண்டு மராட்டிய முதலமைச்சரும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே, பாரதிய ஜனதாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுபோன்ற மிரட்டல்களை சகித்துக்கொள்ள மாட்டோம். உரிய பதிலடி கொடுப்போம் என அவர் எச்சரித்துள்ளார். மீண்டும் எழ முடியாத அளவுக்கு தங்களுடைய அடி வலுவானதாக இருக்கும் என்று உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பாரதிய ஜனதா மேலவை உறுப்பினரான பிரசாத் கெலாட், தமது கருத்துக்களை திரும்ப பெற்றுக்கொண்டதுடன் வருத்தமும் தெரிவித்துள்ளார். எனினும் மராட்டியத்தில் சிவசேனா, பாரதிய ஜனதா இடையே வார்த்தை போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. …