நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை மகளிரணி ஆலோசனை கூட்டம்

நெல்லை, அக். 8: நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை (அக்.9ம் தேதி) மகளிரணி, மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, வருகிற 14ம்தேதி சென்னையில் நடக்கம் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக மகளிரணி, மகளிர் தொண்டரணி ஆலோசனை கூட்டம் வருகின்ற நாளை (9ம்தேதி) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை, மகாராஜநகாில் உள்ள திமுக அலுவலகத்தில் வைத்து நடக்கிறது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி தலைவர் கமலாநேரு சுயம்புராஜன், மாவட்ட மகளிர் தொண்டரணி தலைவர் ஜெயமாலதி வெங்கடேசன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.
மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மல்லிகா அருள், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆண்டனி அல்பின் பிரேமா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் மாவட்ட மகளிரணி, மகளிர் தொண்டரணி மாவட்ட துணைத்தலைவர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள், மகளிர் ஒன்றிய சேர்மன்கள், மகளிர் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்