நெல்லை அருகே வாகனம் மோதி விவசாயி பலி

நெல்லை, மார்ச் 2: நெல்லை அருகே நடந்து சென்ற விவசாயி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். பாப்பாக்குடி அருகேயுள்ள புதுக்கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (55). விவசாயியான இவர், வீட்டில் இருந்து முக்கூடல் – இடைகால் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். புதுக்கிராமம் இசக்கியம்மன் கோயில் அருகே செல்லும் போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த முத்துசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து பாப்பாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை