நெல்லை, ஜலை 17: நெல்லை மாவட்டத்தில் ஜூலை 2024-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 19ம் தேதி கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வைத்து காலை 11 மணியளவில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடக்கும் இக்கூட்டத்தில் நெல்லை மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.