நெல்லை, ஜூலை 7: நெல்லையில் டிப்பர் லாரிகளில் செம்மண் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தச்சநல்லூர் ரவுண்டானா பகுதியில் நேற்று முன்தினம் தச்சநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந் தனர். அப்போது அந்த வழி யாக வந்த 3 டிப்பர் லாரிகளை வழிமறித்து விசாரித்தனர். இதில் லாரிகளில் உரிய அனுமதியின்றி செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து தச்சநல்லூர் காவல் துறை இந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவர்கள் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த அடைக்கலம் மகன் சுடலைமுத்து (31), தாழையூத்து நகரை சேர்ந்த முத்துபாண்டி மகன் வேல்முத்து (30), மாயாண்டி மகன் கைலாசம் (43) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 3 டிப்பர் லாரிகள், 7 யூனிட் செம்மண் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நெல்லையில் லாரிகளில் மண் கடத்திய 3 பேர் கைது
previous post