நெல்லையில் இன்று காஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

நெல்லை, ஜூன் 25: நெல்லையில் காஸ் நுகர்வோர் குறை தீர் கூட்டம் இன்று (25ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா வெளியிட்ட செய்திக்குறிப்பு:நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் இன்று (25ம் தேதி) செவ்வாய் கிழமை பிற்பகல் 5 மணிக்கு நடக்கிறது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்