நெல்லையப்பர் கோயிலில் அங்குரார்ப்பணம்

நெல்லை, ஜூன் 23: நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அங்குரார்ப்பணம் நடந்தது. தென்தமிழகத்தில் பாரம்பரியமிக்க சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் ஆனி திருவிழா சிறப்பு மிக்க விழாக்களில் ஒன்றாகும். இந்தாண்டுக்கான ஆனி பெருந்திருவிழா நாளை (24ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. இதன் சிகரமான தேரோட்ட வைபவம் ஜூலை 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அங்குரார்ப்பனம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயிலில் இருந்து அஸ்திர தேவர் தங்க பல்லக்கில் வெளித்தெப்பம் அருகே அங்குர விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளினார். தொடர்ந்து வெளிதெப்பத்தில் இருந்து புனித மண் எடுக்கப்பட்டு விநாயகர் கோயிலில் வைத்து நவதானியங்களோடு சிறப்பு பூஜைகள் நடந்தன. அங்குர விநாயகர் கோயிலில் தீபாராதனை நடந்தது. இதையடுத்து கோயில் யானை காந்திமதி முன்செல்ல தங்க பல்லக்கில் பிடிமண் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கோயிலில் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மூலவர் மற்றும் உற்சவருக்கு காப்பு கட்டும் நிகழ்வும் தொடர்ந்து நடந்தது.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை