நெலாக்கோட்டையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையை பிடிக்க கோரிக்கை

 

பந்தலூர், பிப்.18: பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையை பிடிக்க பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெலாக்கோட்டை பஜார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பல நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை பகல் நேரங்களிலும் குடியிருப்பு மற்றும் பஜார் பகுதியில் வலம் வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஒற்றை காட்டு யானையால் பொதுமக்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலை போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் பிதர்காடு வனச்சரகம் ரேஞ்சர் ரவியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை