நெய்யாற்றின்கரை நிம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம்

நாகர்கோவில்,ஜூலை 19: திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரையில் உள்ள நிம்ஸ் மெடிசிட்டியில் வருகிற 20ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம் மாற்றுத்திறனாளிகளின் குறைபாடுகளை கண்டறியும் சிறப்பு மருத்துவ குழு மற்றும் பயிற்சி பெற்ற நிபுணர்களால் நடத்தப்படுகிறது. முகாமில் 2 வயது முதல் 30 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகள், கற்றல் குறைபாடு உள்ளவர்கள், ஹைபர் ஆக்டிவ் குழந்தைகள், கவனக்குறைபாடு உள்ளவர்கள், எழுதுவதிலும் வாசிப்பதிலும் பின்தங்கியோர், மெதுவாக கற்பவர்கள், பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டோர் என அனைவருக்கும் தேவையான மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. முகாமில் கலந்துக்கொள்ள வயது வரம்பு குறைந்தது 2 முதல் அதிகபட்சம் 30 வரை அனுமதிக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கும் முன்பதிவுக்கும் 9442065146, 8248841513, 9745586411 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை நிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்