நெடுங்காட்டில் சாலை பணி

 

காரைக்கால்,ஜூலை 24: காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதிக்கு உட்பட்ட கிளியனூர் மற்றும் பஞ்சாட்சபுரம் ஆகிய இரு சாலைகளையும் கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகள் நடைபெற உள்ளது.

இதனிடையே இந்த இரு சாலைகளையும் காரைக்கால் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் ஆய்வு மேற்கொண்டார். அவர் இதற்கு உண்டான பணிகளை அரசிடம் அனுமதி பெற்று விரைவில் பணிகள் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். ஆய்வின் போது நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பாலன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்