சென்னை: நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றி அமைப்பது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவுடன், ஜெர்மன் குழுவினர் ஆலோசனை நடத்தினர். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள 23 எம்.எல்.டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 1974ம் ஆண்டில் செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதனை தற்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தும் வகையில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜெர்மன் அரசின் முழுமையான நிதியுதவியுடன் நெசப்பாக்கத்தில் உள்ள 23 எம்.எல்.டி திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது மற்றும் மறு பயன்பாடு ‘ஷோகேஸ் இன்’ திட்டம், உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப, ஜெர்மன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தியாவில் ஒரு அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கான கருத்தியல் வடிவமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் எதிர்காலத் திட்டங்களுக்கு உலக அளவில் ஒரு முன்னோடி திட்டமாகச் செயல்படும், மேலும் பயிற்சி நோக்கங்களுக்காகவும் இத்திட்டம் பயன்படுத்தப்படும். இம் முன்முயற்சி திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், இத்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவினை அமைச்சர் கே.என்.நேருவிடம் ஜெர்மன் இந்திய நீர் தொழில்நுட்ப கூட்டமைப்பின் குழுவினர் வழங்கினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.பொன்னைய்யா, சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் ராஜ கோபால் சுன்காரா, ஜெர்மன் இந்திய நீர் தொழில்நுட்ப கூட்டமைப்புக் குழுவினர் டாக்டர் ஹான்ஸ் ஸ்பீத், தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மார்க் பெக்கெட், மூத்த விஞ்ஞானி டாக்டர் மைக்கேல் குன் ஆகியோர் உடன் இருந்தனர்.* சுற்றுச்சூழல் பாதிப்பு தடுப்புசுத்திகரிக்கப்படாத அல்லது போதுமான சுத்திகரிக்கப்படாத கழிவுநீரின் கட்டுப்பாடற்ற வெளியேற்றம் நகரங்களில் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மனித ஆரோக்கியம் இரண்டையும் மோசமாக பாதிக்கிறது. இதனால் நிலத்தடி நீரும் மாசுபடுகின்றது. நீர் ஆதாரங்களை முறையற்ற முறையில் நிர்வகிப்பதற்கும் பங்களிக்கிறது. இது பெரும்பாலும் அப்பகுதியில் அதிகமான நீர் தட்டுபாட்டிற்கு வழிவகுக்கிறது. எனவே, இதனை தடுக்கும் வகையில் இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது….
நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றியமைக்க திட்டம்: அமைச்சர் கே.என்.நேருவுடன், ஜெர்மன் குழுவினர் சந்திப்பு
previous post