நூலக முப்பெரும் விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

திருப்புத்தூர், ஜூலை 26: திருப்புத்தூர் அண்ணா கிளை பொது நூலகத்தில் கல்வி வளர்ச்சி தினம், பேச்சரங்கம், புரவலர்களுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, மாவட்ட நூலக அலுவலர் ஜான் சாமுவேல் தலைமை வகித்தார். வாசகர் வட்டத்தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் எழுத்தாளர் கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை நூலகர் மகாலிங்கம் ஜெயகாந்தன் வரவேற்றார்.

எழுத்தாளர் கோகிலாராணி துவக்க உரையாற்றினார். ‘பெருந்தலைவர் காமராஜர்’ எனும் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சரங்கம் நடைபெற்றது. இதில் தி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு காமராஜரை பற்றி உரையாற்றினர். விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் கேடயம், சான்றிதழ், காமராஜர் வரலாறு புத்தகம் வழங்கினார்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’