நூறுநாள் வேலை வழங்க கோரிக்கை: கலெக்டரிடம் மனு

 

ராமநாதபுரம், ஜூன் 6: பார்த்திபனூர் பஞ்சாயத்தில் முறையாக நூறுநாள் வேலை வழங்க வேண்டும் என கூறி கிராம மக்கள் கலெக்டரிடம் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்தனர். இதுகுறித்து பரளை கிராமமக்கள் கூறும்போது, பார்த்திபனூர் பஞ்சாயத்தில் உள்ள பரளை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விவசாய கூலி வேலை மற்றும் நூறுநாள் வேலை செய்து வருகிறோம்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பரளையை சேர்ந்த 85 பேருக்கு மட்டும் முறையாக வேலை வழங்குவது இல்லை. வேலை வழங்கப்படும் நாளில் நிர்வாக அனுமதியிலுள்ள இடத்தில் அளவீடு படி முறையாக வேலை பார்த்தாலும் முழு சம்பளம் வழங்குவது கிடையாது. இதனால் வேலை மற்றும் கூலி இன்றி குடும்பங்கள் வறுமையில் இருக்கிறது. எனவே முறையாக வேலை மற்றும் கூலி வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை