நுங்கம்பாக்கத்தில் நள்ளிரவு பரபரப்பு போதையில் வக்கீல் ஓட்டிய கார் சாலை தடுப்பில் மோதி விபத்து: ஏர் பேக் இருந்ததால் தப்பினார்

சென்னை:நுங்கம்பாக்கம் காவல் நிலையம் எதிரே நேற்று முன்தினம் நள்ளிரவு அதிவேகமாக வந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடையே உள்ள தடுப்புகளை உடைத்து கொண்டு மோதி நின்றது. காரில் ஏர் பேக் இருந்ததால் காரை ஓட்டிய நபர் லேசான காயங்களுடன் தப்பினார். நள்ளிரவு என்பதால் சாலையில் எந்த வாகனங்களும் வராததால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. சத்தம் கேட்டு காவல் நிலையத்தில் இருந்து ஓடிவந்த போலீசார், காரில் சிக்கிய நபரை மீட்டனர். அப்போது அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. உடனே இதுபற்றி பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து காரை ஓட்டிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தி.நகரை சேர்ந்தவர் என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அதில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்தது உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். விபத்து ஏற்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.  …

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்