நீலகிரி, கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீலகிரி, கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பிளாஸ்டிக் பொருள் தொடர்பாக ஆய்வு செய்து இதுவரை ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக நீலகிரி ஆட்சியர் தகவல் அளித்திருக்கிறார். நீலகிரி, கொடைக்கானலில் நெகிழி பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் உத்தரவை அமல்படுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. நீலகிரி, கொடைகானலில் நெகிழி பயன்பாட்டுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீலகிரி, கொடைகானலில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை